நரிக்குறவர் சமூகத்தினருக்கு உதவும் முகநூல் நண்பர்கள் குழு
நெல்லை பேட்டை நரிக்குறவர் காலனியில் உள்ள மக்களுக்கு முகநூல் நண்பர்கள் குழுவினர் தொடர் உதவிகளை செய்து வருகின்றனர்.;
Update: 2024-03-28 04:58 GMT
உணவு வழங்கல்
நெல்லை மாநகர பேட்டை நரிக்குறவர் காலனியில் உள்ள முதியவர்களுக்கு நேற்று (மார்ச் 27) முகநூல் நண்பர்கள் குழு சார்பில் இரவு உணவு வழங்கப்பட்டது. இந்த இரவு உணவினை முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் நேரடியாக சென்று வழங்கினார்.பேட்டை நரிக்குறவர் காலனியில் உள்ள நரிக்குறவர் மக்களுக்கு முகநூல் நண்பர்கள் குழு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.