லாரி மோதி பெண் துப்புரவு பணியாளர் பலி!
செய்யாறு அருகே பால் டேங்கர் லாரி மோதி பெண் துப்புரவு பணியாளர் உயிரிழந்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-01 11:44 GMT
பலி
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கீழ்கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரேவதி தனது மகன் சூர்யாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பால் டேங்கர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
ரேவதி மீது பால் டேங்கர் லாரி ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சூர்யா சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து செய்யாறு காவல் நிலைய காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.