கொட்டகையில் தீ விபத்து- பசுமாடு பலி

கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டதால் பசுமாடு பலி - போலீசார் விசாரணை.

Update: 2024-02-19 05:36 GMT

கொட்டகையில் தீ விபத்து- பசுமாடு பலி

கெங்கவல்லி:ஆத்தூர் அருகே உள்ள உப்போடை பகுதியை சேர்ந்தவர் சேகர்,விவசாயி. இவர் 3 பசு மாடுகளையும், ஒரு கன்று,குட்டியையும் வளர்த்து வருகிறார். நேற்று மதியம் மாட்டு கொட்டகையில் மாட்டுக்கு தீவனம் வைத்து விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். மாலை 5 மணியளவில் எதிர்பாராத விதமாக வைக்கோல் தீப்பற்றி எரிந்தது. இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் 'கொண்டு வந்தனர். இதில், 2 மாடுகள் மற்றும் ஒரு கன்று குட்டியை லேசான காயத்துடன் மீட்டனர். ஒரு பசு மாடு தீயில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News