சேலம் செவ்வாய்பேட்டையில் டீக்கடையில் தீ விபத்து !

சேலம் செவ்வாய்பேட்டையில் சிலிண்டரில் கியாஸ் கசிந்து திடீரென தீ விபத்து ஏற்ப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

Update: 2024-03-12 07:04 GMT

தீ விபத்து

சேலம் செவ்வாய்பேட்டை நரசிம்மன் செட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் குமார் (வயது 30). இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை கடையில் இருந்த சிலிண்டரில் கியாஸ் கசிந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் தீப்பரவி எரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கடையில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறினர். இது குறித்த தகவலின் பேரில் செவ்வாய்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதே நேரத்தில் கடையில் இருந்த ஏராளமான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News