ஸ்வீட் கடை குடோனில் தீ விபத்து!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பாரி பேக்கரிக்கு சொந்தமான குடோனில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது .

Update: 2024-03-30 09:11 GMT

தீ விபத்து

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பாரி பேக்கரிக்கு சொந்தமான குடோனில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது .இதுகுறித்து தகவலறிந்த ஆரணி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை போராடி தீயை அணைத்தனர். குடோனில் யாரும் இல்லாததாலும், குடோன் ஒதுக்குப்புறமாக இருந்ததால் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது‌.இச்சம்பவம் ஆரணி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News