வனப்பகுதிகளில் பற்றி எரிந்த தீ !

கொடைக்கானல் மேல்பள்ளம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பற்றி எரிந்த தீ

Update: 2024-03-06 15:38 GMT

வனப்பகுதிகளில் பற்றி எரிந்த தீ 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக புதர்கள், புல்வெளிகள் காய்ந்து வருவதால் மலைப்பகுதியில் ஆங்காங்கே வனப்பகுதி, வருவாய் நிலம், தனியார் தோட்ட பகுதிகளில் தீயானது எரிந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் பழனி பிரதான மலைச்சாலையில் மேல்பள்ளம் அருகே வனப்பகுதியில் பற்றி எரிந்த தீயை தீவிரமாக அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது.
Tags:    

Similar News