இளையான்குடியில் இருசக்கர வாகன விபத்தில் மீன் வியாபாரி பலி
இளையான்குடியில் இருசக்கர வாகன விபத்தில் மீன் வியாபாரி பலியானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-05-26 15:12 GMT
இளையான்குடி அருகே உள்ள வாணியவெல்லம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் மகன் கருணாநிதி. இவர் தற்போது பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இருசக்கர வாகனத்தில் மீன் வியாபாரம் செய்து வரும் இவர் இளையான்குடி அருகே உள்ள தனியார் கல்லுாரி அருகே காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வந்த நிலையில் அந்த வழியாக சென்ற சரக்கு வாகனம் மோதி விபத்தில் கருணாநிதி பலியானதை தொடர்ந்து சரக்கு வாகனத்தை ஒட்டி வந்த சாணாரேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவரை போலீசார் கைது செய்தனர்.