காது கேளாதோர் பள்ளியில் உணவு வழங்கிய முன்னாள் அமைச்சர்
காது கேளாதோர் பள்ளியில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 300 பேருக்கு இரவு உணவு வழங்கினார்.;
Update: 2024-02-02 07:06 GMT
உணவு வழங்கிய அமைச்சர்
நெல்லை மாநகர மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நேற்று இரவு தமிழக வனத்துறை முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை எதிரே உள்ள காது கேளாதோர் பள்ளியில் 300 பேருக்கு இரவு உணவு வழங்கினார். இந்த நிகழ்வில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.