இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு.

தென்னிலை அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.;

Update: 2024-06-10 08:18 GMT

காவல் நிலையம் (பைல் படம்)

கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, அத்திப்பாளையம் அருகே உள்ள தொப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராக்கப்பன் வயது 70. இவர் ஜூன் 8-ம் தேதி காலை 8 மணி அளவில், கரூர் - கோவை சாலையில், அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் தென்னிலை பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, எதிர் திசையில் கோவை மாவட்டம், கம்பிளியம்பட்டி பகுதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ் வயது 45 என்பவர் வேகமாக ஓட்டி வந்த அரசு பேருந்து, ராக்கப்பன் ஒட்டி சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement

இந்த விபத்தில் ராக்கப்பனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த ராக்கப்பனின் மகள் காந்திமதி வயது 43 என்பவர், இதுகுறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த ராக்கப்பன் உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து, அரசு பேருந்தை, வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சதீஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல் துறையினர்.

Tags:    

Similar News