ஆட்டை கடித்து குதறிய செந்நாய் கூட்டம். 

அருமனை அருகே சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட ஆட்டை செந்நாய்கள் கூட்டம் கடித்து கொன்றன. இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-12-22 08:37 GMT
பைல் படம்
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே  சிற்றாறு சிலோன் காலனி பகுதி உள்ளது. இந்த பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் ரப்பர் பால் வடிப்பு தொடரில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர வனப்பகுதிகளில் சென்று ஆடு மாடுகளை மேய்ப்பவர்களும் உள்ளனர்.நேற்று மதியம் சிலோன் காலனி பகுதியை சேர்ந்த பத்மநாபன் என்பவர் தனது ஆடுகளை வழக்கம்  போல் மேய்ச்சலுக்கு விட்டார். அந்த சமயத்தில் செந்நாய்கள் கூட்டமாக புகுந்து ஆடுகளை விரட்டியது. உடனே ஆடுகள் அச்சத்துடன் நாலாபுறமும் சிதறிஓடியது. ஆனால் ஒரு ஆடு வசமாக செந்நாய் கூட்டத்தில் சிக்கிக் கொண்டது இந்த சம்பவ தொடர்பாக  பத்மநாபன்  வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். வனத்துறையினரும் விரைந்து வந்து விசாரித்தனர்.
Tags:    

Similar News