வீடற்றவர்களுக்கு வீட்டுமனை - அன்பளிப்பாக வழங்கிய பொறியாளர்

Update: 2023-12-10 06:15 GMT
பூமி பூஜை நடைபெற்றது
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பட்டுக்கோட்டை வார்டு எண் 25 பண்ணைவயல் ரோடு சிவக்கொல்லையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக சாலையோர புறம்போக்கு பகுதியில் குடிசை வீட்டில் குடியிருந்து வந்த 17 குடும்பத்தினருக்கு தலா 5 குழி வீதம் மனை ஒதுக்கப்பட்டு  பூமி பூஜை நடைபெற்றது. சிவக்கொல்லை பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக சாலையோர புறம்போக்கு பகுதியில் குடியிருந்த வந்த 17 குடும்பத்தினர் சொந்த இடம் வேண்டி பலமுறை அரசாங்கத்திடம் முறையிட்டு இடம் கிடைக்காத பட்சத்தில் பல ஆண்டுகளாக போராடி முன்னாள் நகர் மன்ற தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான எஸ்.ஆர்.ஜவகர்பாபு, மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வெள்ளைச்சாமி ஆகியோர் பொறியாளர் இளமுருகன் என்பவருடைய இடத்தினை அன்பளிப்பாக பெற்று சாலையோரத்தில் புறம்போக்கில் குடியிருந்த 17 குடும்பத்தாருக்கு தலா ரூ. 5 ஐந்து லட்சம் மதிப்புள்ள 5 குழி வீதம் மனை ஒதுக்கப்பட்டு, பயனாளிகள் 17 பேருக்கும் வீட்டு மனை  ஒப்படைக்கப்பட்டது . மேலும் ஒரே நேரத்தில் 17 குடும்பத்தாருக்கும் வீட்டு மனை பூஜை நடைபெற்றது. இந்த இடத்தினுடைய மதிப்பு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் ஆகும். இன்று மனைபூஜை சிறப்பாக நடத்திய 17 குடும்பத்தாரும் இந்த இடத்தினை பெற்று தந்த முன்னாள் நகர்மன்ற தலைவரும் நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ஜவகர்பாபு மற்றும் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வெள்ளைச்சாமி, இலவசமாக வழங்கிய பொறியாளர் இளமுருகன் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.
Tags:    

Similar News