விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

திருக்காட்டுப்பள்ளி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

Update: 2024-02-26 16:12 GMT

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி காவல் சரகம், கூத்தூர் பழைய காலனி தெருவைச் சேர்ந்தவர் நாகையன் மகன் முருகேசன் (55). குடிப்பழக்கம் உள்ள இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாராம். கடந்த 20-ஆம் தேதி வயிற்றுவலி அதிகமானதால் வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு மயக்கம் அடைந்தாராம். இதையறிந்து வீட்டில் உள்ளவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி ராஜேஸ்வரி திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ஜெகதீஸ்வரன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News