கால்கள் கட்டிய நிலையில் இறந்த நாயை சாக்கு பையில் வீசி சென்ற நபர்
கால்கள் கட்டிய நிலையில் இறந்த நாயை சாக்கு பையில் வீசி சென்ற நபர் குறித்து விசாரணை விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.;
By : King 24x7 Angel
Update: 2024-02-08 06:14 GMT
விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
கோவை: சாய்பாபா காலணி கே.கே.புதூர் பகுதியில் வசித்து வரும் பாலகிருஷ்ணன்(29) விலங்குகள் நல அலுவலராக உள்ளர். சம்பவதன்று இவரை அலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நபர் உடையாம்பாளையம் கண்ணபிரான் மில் அமைந்துள்ள பகுதியில் ஆறு வயது மதிக்கதக்க ஆண் நாய் ஒன்று கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்து உள்ளார்.இதனையடுத்து அங்கு சென்ற பாலகிருஷ்ணன் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்ட போது டி.வி.எஸ் வாகனத்தில் வந்த நபர் ஒருவர் சாக்கு பையில் கால்களை கட்டி நாயை வீசி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள பீளமேடு போலீசார் வாகனத்தில் வந்த மர்ம நபர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.