மணல் கடத்திய லாரி பறிமுதல்: ஒருவர் கைது!

மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-12-18 10:06 GMT

பறிமுதல் செய்யப்பட்ட லாரி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து அன்னவாசல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் அன்னவாசலை அடுத்த குடுமியான்மலை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது அப்போது தெப்பக்குள பகுதி வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் உரிய அனுமதி இன்றி மணல் கடத்தியதாக தெரியவந்தது.

இதையடுத்து அந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து அதன் டிரைவர் கள்ளம்பட்டியைச் சேர்ந்த குமரேசன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் லாரியின் உரிமையாளரான இலுப்பூர் மேலபட்டியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News