வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

கடம்பூர் மலைப்பகுதியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வழக்கில் ஒருவரை கைது செய்த போலீசார் மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Update: 2024-07-03 04:53 GMT

கைது செய்யப்பட்ட குமார் 

டம்பூர் அடுத்த அத்தியூர் அருகேயுள்ள அட்டணை பகுதியை சேர்ந்த மாதன் (65) என்பவர் கஞ்சா பயிரிட்டு வளர்த்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடம்பூர் போலீசார் நேற்று அவரது வீட்டிற்கு சென்ற சோதனை செய்தனர். போலீசார் சோதனையில்; மாதன் தனது வீட்டின் பின்புறம் உள்ள கொல்லை புறத்தில் சட்ட விரோதமாக கஞ்சா செடிகளை பயிரிட்டு விற்பனைக்காக வளர்த்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 5 கஞ்சா செடிகளை கைப்பற்றிய கடம்பூர் போலீசார் மாதன் மற்றும் அவரது மகன் குமார் (34) ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். மாதன் தலைமறைவானதை அடுத்து குமார்-ஐ கடம்பூர் போலீசார் கைது செய்து, கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News