நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

செங்குறிச்சி அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

Update: 2024-01-29 07:35 GMT
நாட்டு துப்பாக்கி 
செங்குறிச்சி அருகே உளுந்துார்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நாட்டுத் துப்பாக்கியுடன் வந்த வாலிபரைப் பிடித்து விசாரித்தனர். அதில் அவர், செங்குறிச்சியைச் சேர்ந்த விஜயகுமார், 31; எனவும் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கியை எடுத்துச் சென்று வந்தது தெரிந்தது. உடன் அவரை கைது செய்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News