ஆற்றில் மிதந்த ஆண் சடலம்

கன்னியாகுமரி மாவட்டம், வள்ளியாற்றில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-21 07:26 GMT
பைல் படம்

குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் மீனவ கிராமத்தில் வள்ளியாறு கடலில் கலக்கிறது. நேற்று ஆறு கடலில் சேரும் பகுதியில் சுமார் 65 வயதான ஆண் பிணம் ஒன்று மிதந்து வந்தது. தகவலின் பேரில் போலீசார் சென்று உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று உடனடியாக தெரியவில்லை. பின்னர் விசாரணையில், இறந்து கிடந்தவர் ஈத்தாமொழி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பதும், (6 2) சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் கடந்த 17ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி சென்றதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து பாலகிருஷ்ணன் உறவினர்கள் உடலை அடையாளம் காட்டினார்கள்.

Tags:    

Similar News