மனைவியிடம் சண்டை போட்ட கொத்தனார் தற்கொலை

மயிலாடுதுறை அருகே வெளியூரிலிருந்து கோயில் திருவிழாவிற்கு வந்த கொத்தனார் அவரது மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-05-15 10:38 GMT

மயிலாடுதுறை அருகே வெளியூரிலிருந்து கோயில் திருவிழாவிற்கு வந்த கொத்தனார் அவரது மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார்கோவில் மேமாத்தூர் காசான்தட்டையை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி மாலதி (38) இவரது கணவர் ராமச்சந்திரன் வெளியூரில் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவ தினத்தன்று ஊரில் நடக்கும் திருவிழாவிற்காக வேலையை நிறுத்திவிட்டு ஊருக்கு திரும்பினார். வந்து பார்த்தபோது மாலதி தனது தங்கை வீட்டிற்கு சென்றுள்ளார்,  போன் மூலம் நான் ஊருக்கு வந்துள்ளேன், வா என்று கூப்பிட்டதற்கு, நான் இரண்டு நாள் கழித்து தான்  வருவேன் என்று மாலதி கூறியுள்ளார் . இதனால் மன உளைச்சல் அடைந்த இராமச்சந்திரன் வீட்டுக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மாலதிக்கு செய்தி சொன்ன பிறகு அவர் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News