வடலூரில் காவலர் மீது ரவுடி கும்பல் தாக்குதல்

வடலூரில் காவலர் மீது ரவுடி கும்பல் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-01-25 16:27 GMT

குவிக்கப்பட்டுள்ள போலீசார்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் தைப்பூச திருவிழா பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ரமேஷ் மீது ரவுடி கும்பல் தாக்குதல் நடந்துள்ளது.

பெண்களை கிண்டல் செய்ததை கண்டித்ததால் ஆத்திரமடைந்த ரவுடிகள் காவலர் ரமேஷ் மீது தாக்குதல். காவலரைத் தாக்கியதாக ரவுடிகள் பரஞ்சோதி, ராமலிங்கம், ரவி உள்ளிட்ட 6 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News