சிவகாசி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி !

சிவகாசி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலை தடுமாறி விழுந்து பலி - போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை

Update: 2024-04-13 10:39 GMT

வழக்கு

சிவகாசி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலை தடுமாறி விழுந்து பலி.. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள கோணம்பட்டி இந்திராகாந்தி காலனியை சேர்ந்தவர் பழனிக்குமார் ( 45).இவர் சம்பவத்தன்று இரவு தனது டூவிலரில் சிவகாசி - சாத்தூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தவரை சிவகாசியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News