கழுத்தை அறுத்துக் கொண்ட நபர் உயிரிழப்பு!
மனநலம் பாதிக்கப்பட நபர் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
Update: 2024-03-25 11:29 GMT
கீரனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட களமாவூர் ரெனேசன் டிரஸ்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்த புதுக்கோட்டை திருவப்பூர் முத்தனா குறிச்சி கிராமத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட அஜித்குமார் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்நிலையில் கீரனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மார்டின் ராஜ் வழக்கு பதிவு செய்து விரிவான விசாரணை செய்து வருகிறார்.