புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

மாப்பிள்ளை குப்பம் பகுதியில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து ரூ.75 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-05-28 03:25 GMT

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா 

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாப்பிள்ளை குப்பம் கடைத்தெருவில் உள்ள ராசி என்ற மளிகை கடை மற்றும் அவரது வீட்டில் சோதனை செய்தபோது அவர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூபாய் 75 ஆயிரத்து 820 ரூபாய் மதிப்பிலான குட்கா மற்றும் இரு சக்கர வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மாப்பிள்ளைக்குப்பம் பிடாரி கோவில் தெருவை சேர்ந்த சக்கரபாணி என்பவரின் மகன் சிங்காரவேலு என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News