ஓடும் பஸ்சில் பிக்பாக்கெட் அடிக்க முயன்றவர் கைது

கோவையில் ஓடும் பஸ்சில் பயணியிடம் பிக் பாக்கெட் அடிக்க முயன்ற வாலிபர் பிடிக்கப்பட்டு, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Update: 2024-02-06 05:11 GMT

பைல் படம்

கோவை:செல்வபுரம் பகுதியை சேர்ந்த விஜயன் என்பவர் உக்கடம் காய்கறி மார்க்கெட்டில் பழக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தொன்று கடையை மூடிவிட்டு தனது நண்பருடன் பேருந்தில் பயணித்துள்ளார்.அப்போது கோவை அரசு மருத்துவமனை அருகே வாலிபர் ஒருவர் விஜயனிடம் இருந்து பிக் பாகெட் அடிக்க முயன்றுள்ளார்.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் நண்பரின் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து உக்கடம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார்ன் விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த வெற்றிவேல் முருகன் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் வெற்றிவேல் முருகனை சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News