திமுக சார்பில் மதநல்லிணக்க உறுதிமொழி

ஒசூரில் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் திமுக சார்பில் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர்.

Update: 2024-01-31 05:56 GMT
ஒசூரில் திமுக சார்பில் மதநல்லிணக்க உறுதிமொழி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கிணங்க, நாடு சந்தித்து வரும் மதவெறி பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும், நாட்டு மக்கள் அனைவரும் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் கூட்டணி கட்சி சார்பில் ஒசூர் தாலுகா அலுவலகம் செல்லும் சாலை அண்ணா சிலை அருகில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்று மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ், MLA, மாநகர செயலாளரும் மேயருமான எஸ். ஏ. சத்யா, Ex. MLA, மாவட்டதுணை செயலாளர் முருகன், Ex. MLA முழக்கங்கள் எழுப்பினர். உடன் மாவட்ட துணை செயலாளர்கள் சின்னசாமி, புஷ்பாசர்வேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எல்லோராமணி, வீராரெட்டி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர்கள் தனலட்சுமி, அப்துல்கலாம், மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, ஒன்றிய செயலாளர்கள் நாகேஷ், ரகுநாத்,சின்ராஜ், பாக்கியராஜ்,ராஜா கருணாகரன், பகுதி செயலாளர்கள் வெங்கடேஷ், ராமு, திம்மராஜ், மாநகர நிர்வாகிகள் செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன் சாந்தி, கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள், வார்டு செயலாளர்கள், இன்னாள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு செயலாளர்கள், கிளை செயலாளர்கள் கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்து முழக்கங்கள் எழுப்பினர்.
Tags:    

Similar News