டூவீலர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து !
டூவீலர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து ஒருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.;
By : King 24x7 Angel
Update: 2024-04-17 09:29 GMT
வழக்கு பதிவு
டூவீலர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து ஒருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, ஆரியூர், நல்லசெல்லிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் வயது 36. இவரது நண்பர் கரூர், முத்துரங்கப்பட்டி அருகே உள்ள சோனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் வயது 26. இவர்கள் இருவரும் இவர்களுக்கு சொந்தமான டூவீலரில் ஏப்ரல் 16ஆம் தேதி காலை 11:30 மணி அளவில், கரூர் சர்ச் கார்னரில் இருந்து ஐந்து ரோடு செல்லும் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் ரயில்வே ஜங்ஷன் சாலையில் உள்ள,5 ரோடு, காமராஜ் மார்க்கெட் அருகே வந்தபோது, எதிர் திசையில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், வைரம் பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் 22 என்பவர் வேகமாக ஓட்டி வந்த தனியார் பேருந்து, சந்தோஷ் குமார் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த ஜெகநாதனுக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள நிசா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, சந்தோஷ் குமார் அளித்த புகார் பேரில் சம்பவ இடத்தில் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தனியார் பேருந்தை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர் கார்த்திகேயன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.