குடும்பத் தகராறில் தனியார் நிறுவன டிரைவர் துாக்கிட்டு தற்கொலை....

திருப்பத்தூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக தனியார் நிறுவன டிரைவர் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2024-04-26 07:23 GMT

தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஏ.கே மோட்டூர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனியார் நிறுவன டிரைவர் துாக்கிட்டு தற்கொலை.

திருப்பத்துார் அருகே ஏ.கே மோட்டூர் ஆத்துார் மேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன்(23). இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார்.மேலும் கடந்த ஓராண்டுக்கு முன் சென்னை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு முன் அவரது மனைவி தாய் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் செல்போன் மூலம் பலமுறை தொடர்பு கொண்டாலும், அவரது மனைவி பதில் அளிக்கவில்லையாம். இதனால் விரக்திரடைந்த ஜெகன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த திருப்பத்துார் கிராமிய போலீசார் தற்கொலை செய்து கொண்ட ஜெகன் உடலை மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து அவரது தந்தை பழனி கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்துார் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News