மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

தென்காசியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-02-19 16:07 GMT

 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் 

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல் கிஷோர். இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2-பயனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள் தலா ரூ.13,500/- வீதம் மொத்தம் ரூ.27,000/- மதிப்பிலான மூன்று சக்கர வண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர். இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்.
Tags:    

Similar News