கல்லாங்காட்டு வலசு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2024-02-16 20:03 GMT
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில், பள்ளிபாளையம் ஒன்றியம், கல்லாங்காட்டு வலசு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இதில் விவசாய சங்க வடக்கு ஒன்றிய செயலாளர் தனேந்திரன், தலைமை தாங்கினார். இதில் மத்திய அரசு வேளாண் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்! பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும்! டெல்லியில் போராடிய விவசாயிகளுக்கு அளித்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ,கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. விவசாய சங்க மாவட்ட செயலாளர் படைவீடு பி.பெருமாள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை ஆற்றினார். , வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன் மற்றும் விவசாய சங்க தோழர்கள் தொழிலாளர்கள் திரளானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Tags:    

Similar News