தென்மாவட்டங்களில் நடக்கும் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்

Update: 2023-11-20 14:07 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில், தென்மாவட்டங்களில் உள்ள நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேவேந்திர குல வேளார் மீது தொடர்ந்து ஆதிக்கசாதியினர் தாக்குவதை கண்டித்தும்,

மேலும் அவர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டும் காணாமல், இருக்கும் காவல்துறையை கண்டித்தும், மேலும் இந்த சம்பவத்தை தடுக்க தவறிய தமிழக அரசைக் கண்டித்தும் தமிழக மக்கள் முன்னேற்றக்கம் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News