எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில்,பொதுமக்கள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-12-13 11:32 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர் தலைமையில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி மோகன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரேம் ஆனந்த், கரூர் காவல்துணை கண்காணிப்பாளர் சரவணன் உள்ளிட்ட மாவட்ட அளவிலான காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை உட்கோட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட குற்றப்பிரிவு, நில அபகரிப்பு பிரிவுகளில் தங்கள் பிரச்சனை குறித்த புகார்களை மனுக்களாக அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், அது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, தகுந்த உத்தரவுகளை பிறப்பித்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
Tags:    

Similar News