மீன்பிடி வலையில் சிக்கிய மலைப்பாம்பு

நெல்லையில் மீன் பிடி வலையில் சிக்கிய மலைப்பாம்பினால் பரபரப்பு. வனத்துறையினர் மலைப்பாம்பை மீட்டு வனத்துறைக்கு கொண்டு சென்றனர்

Update: 2024-02-15 08:46 GMT

மீன்பிடி வலையில் சிக்கிய மலைப்பாம்பு

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் மீன் பிடி வலை அமைக்கப்பட்டிருந்தது. இதில் மலைப்பாம்பு ஒன்று இன்று சிக்கியது. இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் ஏர்வாடி நகர செயலாளர் ஷேக் முகமது வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருக்குறுங்குடி வனத்துறையினர் மலைப்பாம்பை மீட்டு வனத்துறைக்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News