கிணற்றுக்கு தடுப்புசுவர் அமைக்க கோரிக்கை

மொஞ்சனூர் கிராமத்தில் சாலை ஓரத்தில் உள்ள கிணற்றுக்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2023-12-19 08:46 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே, மொஞ்சனூர் கிராமத்தில், கூத்தம்பாளையம் வழியாக ஒ.சவுதாபுரம் செல்லும் சாலையின் ஓரத்தில், தனியார் பால் குளிரூட்டும் நிலையம் அருகே நீர்ப்பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் தனி நபருக்கு சொந்தமான கிணறு உள்ளது.

தடுப்பு இல்லாமல், சாலை ஓரத்தில் உள்ள கிணற்றால், வாகன ஓட்டிகள் மற்றும் குழந்தைகளுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக, கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சாலையோரம் தடுப்பு இல்லாமல் உள்ள கிணற்றுக்கு தடுப்புச் சுவர் வேண்டும் என, அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இரண்டு ஆண்டுக்கு முன், அந்த வழியாக சென்ற வெளியூரை சார்ந்த 40 வயது மதிப்பு தக்க ஆண், கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.

உடனடியாக கிராம மக்கள் கிணற்றுக்குள் குதித்து, அந்த நபரை காப்பாற்றினர். மேலும் பெரிய விபத்து ஏற்படுவதற்குள், துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, குறைந்தபட்சம், கிணற்றுக்கு தடுப்பு சுவர் அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News