பயணிகள் நிழற்குடை அமைக்க கோரிக்கை!
செங்கம் அருகே நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-17 16:34 GMT
மக்கள் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் காமராஜர் சிலை பழைய அரசு மருத்துவமனை வளாகம் அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது. செங்கம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பயணிகள் தினமும் பேருந்தில் பயணம் செய்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் கடும் வெயிலில் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.