சில்வர் ஓக் மரங்கள் வெட்டும் அனுமதியை எளிமையாக்க கோரிக்கை

நீலகிரியில் சில்வர் ஓக் மரங்களை வெட்டுவதற்கான நடைமுறைகளை அரசு எளிமையாக்க வேண்டும் என்று மலை மாவட்ட விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றினர்.

Update: 2024-06-27 05:50 GMT

மலை மாவட்ட சிறு விவசாயிகள்‌ நல சங்க உயர்‌மட்ட குழு கூட்டம்‌ 

மலை மாவட்ட சிறு விவசாயிகள்‌ நல சங்க உயர்‌மட்ட குழு கூட்டம்‌ ஊட்டியில் நடைபெற்றது. தலைவர்‌ தும்பூர்‌ போஜன்‌ தலைமை தாங்கினார். துணை தலைவர்கள்‌ மணிகண்டன், சிவலிங்கம்‌ ஆகியோர்‌ முன்னிலை வகித்தனர்‌.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:- நீலகிரி மாவட்டத்தில்‌ விவசாயிகள்‌ தங்களுடைய அத்தியாவசிய தேவைக்கு வளர்க்கப்படும்‌ சில்வர்‌ ஓக்‌ மரங்களை விற்பனை செய்ய வேண்டுமானால் வனத்துறை, வருவாய்‌ துறை, போலீஸார் உள்ளிட்ட துறையின்‌ மூலமாக முதலில் மரம் வெட்டவும் லாரியில்‌ எடுத்து செல்ல அனுமதியும் பெற வேண்டியுள்ளது. இதற்கு அனுமதி உடனடியாக வழங்கப்படுவதில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கர்நாடகா மற்றும் கேரளா மாநிலத்தில் இருப்பது போல பட்டா நிலத்தில்‌ உள்ள மரங்களை விவசாயிகள் அறுத்து விற்பனை செய்யும் நடைமுறையை அரசு எளிமையாக வேண்டும். தமிழ்நாட்டில் விவசாய நிலங்கள் மண்ணின் தரம் குறித்து தெரிவதில்லை. இதனால், ஒரே மாதிரியான மருந்துகளையும், உரங்களையும் பயன்படுத்துகின்றனர். இதனால், மகசூல் குறைகிறது. எனவே, அரசு முன்வந்து விவசாய நிலங்களில் ஆய்வு மேற்கொண்டு மண்ணின் தரம் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும். அதற்கான சான்றுகளும் வழங்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில்‌ உள்ள ௯ட்டுறவு தொழிற்சாலைகளில் உறுப்பினர்களாக உள்ளவர்கள்‌ இறந்து விட்டால்‌ இறப்பு நிதி, அவர்கள்‌ குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், மறைந்த 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது.எனவே, இறப்பு நிதி உடனடியாக வழங்க வேண்டும். ‌ஊட்டி நகராட்சியை, மாநகராட்சியாக மாற்ற அதனை‌ சுற்றியுள்ள பேரூராட்சி, ஊராட்சி ஆகியவைகளை சேர்ப்பதாக அரசு கூறியுள்ளது. எந்த ஒரு பேரூராட்சியையும், ஊராட்சியையும் மாநாகராட்சியுடன் இணைக்க கூடாது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News