விஜயகாந்த் மறைவிற்கு மவுன அஞ்சலி

கந்திலி ஒன்றியம் தேமுதிக கழக நிர்வாகிகள் சார்பில் கேப்டன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர்

Update: 2023-12-28 14:39 GMT

விஜயகாந்திற்கு அஞ்சலி

தேமுதிக நிறுவனரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில் பலரும் அவருக்கு நேரில் மரியாதை செலுத்தி வருகின்றனர். , தமிழகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் அவரது திரு உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்., இதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் தொகுதி சார்பில் தேமுதிக தாதங்குட்டை பொறுப்பாளர் ரமேஷ் தலைமையில் கந்திலி ஒன்றியம் நாட்றம்பள்ளி திருப்பத்தூர் ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கழக நிருவாகிகள் கட்சி கொடி அரை கம்பத்தில் பறக்கவிட்டு கேப்டன் விஜயக்காந்த் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அஞ்சலி செலுத்தும் இடத்திற்கு வந்த பொதுமக்கள் விஜயக்காந்த் திரு உருவ படத்தை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.,
Tags:    

Similar News