ராசிபுரம் அருகே வீட்டின் சமையல் அறைக்குள் புகுந்த சாரை பாம்பு

ராசிபுரம் அருகே வீட்டின் சமையல் அறைக்குள் 4 அடி நீளம் சாரை பாம்பு புகுந்தது.

Update: 2023-12-16 09:23 GMT

வீட்டிற்குள் புகுந்த பாம்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை குட்டிபுலி தோட்டம் பகுதியை சேர்ந்த சங்கர்(38) கூலி வேலை செய்து வருகிறார்.இந்த நிலையில் வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றுள்ளார்.

வீட்டின் அருகே அமர்ந்திருந்த பெண்கள் அவரது வீட்டிற்குள் பாம்பு உள்ளே நுழைவதை கண்டுள்ளனர்.பின்னர் ராசிபுரம் தீயணைப்புத் துறையினர்க்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அரை மணி நேரமாக போராடி சமையலறையில் புகுந்த 4 அடி நிளம் கொண்ட சாரைப்பாம்பை உயிருடன் மீட்டனர்.

பிடிபட்ட சாரை பாம்பை தீயணைப்புத் துறையினர் ராசிபுரம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர் அதன் பிறகு பாம்பை போதமலை பகுதியில் உயிருடன் விடுவித்தனர்.

Tags:    

Similar News