தாயின் ஆசையை நிறைவேற்றி வைத்த மகன்

சிவகங்கையில் தாயின் ஆசையை நிறைவேற்ற கல்லறையில் தாலி கட்டிய மகன் - உறவினர்கள் நெகிழ்ச்சி

Update: 2024-02-23 04:25 GMT

கல்லறையில் தாலி கட்டிய மகன்

மதுரையில் வசித்து வரும் முருகன் மற்றும் ஈஸ்வரி தம்பதியின் மகன் தினேஷ் குமார். இவரது தாயார் ஈஸ்வரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நல குறைவால் காலமானார். இறந்த அம்மாவின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், மாங்குடி கிராமத்தில் அம்மாவின் நினைவாக மணிமண்டபம் கட்டி தெய்வமாக வழிபட்டு வந்தார். தினேஷ்குமாரின் அம்மாவிற்கு மகனுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று கடைசி ஆசை இருந்து வந்த நிலையில் இறந்துவிட்டார். அவரது ஆசையை எப்படி நிறைவேற்றுவது என்று யோசித்த அவர், அம்மாவின் கல்லறையில் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். அதை நிறைவேற்றும் விதமாக தினேஷ்குமாருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தினேஷ்குமாருக்கு மதுரையை சேர்ந்த கண்ணன் மற்றும் விஜி தம்பதிகளின் மகளான காயத்ரி என்ற பெண்ணுடன் அம்மாவின் கல்லறை முன்பு திருமணம் நடைபெற்றது. இச்சம்பவம் அங்கிருந்த மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது
Tags:    

Similar News