கும்பாபிஷேகம் நடத்த கோரி சிறப்பு பூஜை

உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலை புணரமைப்பு செய்து நடத்த வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் சிறப்பு கணபதி ஹோமம் நடைபெற்றது

Update: 2024-01-04 07:45 GMT

உளுந்தூர்பேட்டையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை

உளுந்துார்பேட்டையில் பழமை வாய்ந்த சுப்பிரமணி சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 26 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனால் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர். அதனையொட்டி சுப்பிரமணி சுவாமி கோவில் திருப்பணி செய்து கும்பாபிேஷகம் நடத்த வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் நேற்று கணபதி ஹோமம் மற்றும் கூட்டு பிரார்த்தனை நடந்தது.

நிகழ்ச்சி எற்பாடுகள் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் செல்லையா தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ., மணிக்கண்ணன், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு, உளுந்துார்பேட்டை நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, துணை சேர்மன் வைத்தியநாதன், ஒன்றிய சேர்மன் சாந்தி இளங்கோவன், நகராட்சி கவுன்சிலர்கள் ஜெய்சங்கர், சாந்தி இளங்கோவன், ராஜேஸ்வரி சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News