ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

தர்மபுரி மதிகோண் பாளையம் அருகே ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

Update: 2024-04-11 04:04 GMT
தர்மபுரியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றனர்.இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். தொழுகை முடிந்து ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.தர்மபுரி நகர அனைத்து மசூதிகளின் கூட்டமைப்பின் சார்பில் தர்மபுரி- கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் மதிக்கோன் பாளையம் அருகே ஈத்கா ஏரிக்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்றனர்.தொடர்ந்து இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதே போன்று தர்மபுரி டேகிஸ்பேட்டை,  கீழ் மசூதி தெரு, முகமது அலி கிளப் ரோடு, மதிகோன்பாளையம், வி.ஜெட்டிஅள்ளி, வட்டார வளர்ச்சி காலனி ஆகிய இடங்களில் உள்ள மசூதிகள் மற்றும் தர்மபுரி நகரை சுற்றியுள்ள அனைத்து மசூதிகளிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News