புளியங்குடி அருகே கிணற்றில் மூழ்கி மாணவர் பலி

புளியங்குடி அருகே கிணற்றில் மூழ்கி மாணவர் உயிரிழந்தான்.

Update: 2024-01-27 05:51 GMT

பைல் படம்


தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே திருமலாபுரத்தைச் சோ்ந்த முத்துராஜ் மகன் கனிஷ்குட்டி(10). அங்குள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தாா். முத்துராஜ் தனது நண்பா்களுடன் ஊருக்கு அருகேயுள்ள கிணற்றில் மீன் பிடிக்கச் சென்றாராம். அப்போது தவறி விழுந்து நீரில் மூழ்கிய அவரை, அருகில் இருந்த விவசாயிகள் மீட்க முயன்றனா். ஆனால், அவா்களால் மீட்க முடியவில்லை. தகவலறிந்து வந்த சோ்ந்தமரம் போலீஸாா், தீயணைப்புதுறையினா் உதவியுடன் கிணற்றில் மிதந்த சிறுவனின் உடலை மீட்டு கடையநல்லூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Tags:    

Similar News