பெற்றோர் பிரிந்ததால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவர்

Update: 2023-09-29 03:51 GMT

கனிஷ்கர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பள்ளிபாளையம் அருகே வெப்படை பகுதியில் பெற்றோர் பிரிந்து இருப்பதால் பிளஸ் 1  மாணவர் வீட்டை விட்டு வெளியேறினார்.

பள்ளிபாளையம் அருகே எலந்தகுட்டை பகுதியில் வசிப்பவர் கனிஷ்கர், 17. சவுதாபுரம் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். 8 ஆண்டுகள் தன் பெற்றோர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இதனால் மனமுடைந்த இவர், நேற்று வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு, வீட்டிலிருந்து வெளியேறினார். இது குறித்து இவரது தந்தை ராமசாமி, வெப்படை போலீசில் புகார் கொடுக்க, வெப்படை போலீசார் காணமல் போன மாணவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News