கேஸ் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரியில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு

Update: 2023-12-12 09:00 GMT

தீ விபத்து 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து நாள்தோறும் கேஸ் சிலிண்டரை லாரிகளில் ஏற்றி செல்வது வழக்கம். இந்நிலையில் கேஸ் ஏற்றிச் சென்ற லாரி இன்று வழக்கம் போல் உதகையில் இருந்து மேட்டுப்பாளைய மலைப்பாதை வழியாக செல்லும் பொழுது கல்லார் 10 அடி பாலம் அருகே சென்று போது திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனே ஓட்டுனர் லாரியை சாலையில் லாரியை நிறுத்தியுள்ளார். பின்பு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். கேஸ் சிலிண்டர் லாரியில் தீப்பற்றி எரிந்ததால் மலைப்பாதையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
Tags:    

Similar News