மக்காச்சோள தட்டையில் திடிரென தீ விபத்து !

வீரகனூர் அருகே மக்காச்சோள தட்டையில் திடிரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார்2 மணி நேரம்போராடி தீயை அணைத்தனர்.

Update: 2024-04-05 08:14 GMT

தீ விபத்து

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வீரகனூர் அருகே பெரம்பலூர் மாவட் டம், வேப்பந்தட்டை பகுதியில், மகேந்திரன் என்பவரின் கோழிப்பண்ணை அருகில், 5 ஏக்கர் பரப்பளவில் மக்காச் சோளம் பயிரிடப்பட்டுள்ளது. அறு வடை முடிந்த பிறகு, அதன் தட்டை கழிவுகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், நேற்று மாலை திடீ ரென தீப்பற்றி எரிய தொடங்கியது. மளமள தீ பரவியதால், மகேந்திரன் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில், நிலையஅலுவலர் (பொ) செல்லப்பாண்டியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார்2 மணி நேரம்போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்ட நிலையில், மகேந்திரனுக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் உயிர் தப்பின.
Tags:    

Similar News