ஆலங்குளத்தில் எழுத படிக்க தெரியாதவர்கள் கணக்கெடுக்கும் பணி

ஆலங்குளத்தில் எழுத படிக்க தெரியாதவர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2024-06-29 10:20 GMT

எழுத படிக்க தெரியாதவர்கள் கணக்கெடுக்கும் பணி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாறாந்தை கிராம பகுதியில் நடைபெற்று வரும் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாத வரை கணக்கெடுக்கும் பணியை மாவட்ட களப்பணி அலுவலர் செல்வகுமார் ஆய்வு செய்தார்.

அப்போது தன்னார்வலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனைத்து கற்போருக்கும் வரும் கல்வியாண்டில் முழுமையாக எழுத்தறிவு வழங்க தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும் என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் மற்றும் அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News