கடலில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி

நாகூரில் கடலில் குளிக்க சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த தஞ்சை வாலிபரின் உடலை எஸ்டிபிஐ கட்சியினர் சட்ட நடைமுறைகளை மேற்கொண்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

Update: 2024-02-19 05:28 GMT

சொந்த ஊருக்கு அனுப்பட்ட வாலிபர் உடல் 

தஞ்சாவூர் பந்த நல்லுரை சேர்ந்த சபிபுல்லா நாகூருக்கு வருகை தந்தனர். நாகூர் கடற்கரையில் குளிக்க சென்ற போது அதில் சபிபுல்லா எதிர்பாராத விதமாக கடலில் சிக்கி உயிர் இழந்தார்.இது குறித்து நாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் மேலும் அவரது உறவினர்கள் SDPI கட்சியை தொடர்பு கொண்டு அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்ல கேட்டு கொண்டதை அடுத்து SDPI கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் கல்லார் மெய்தீன் நாகை சட்டமன்ற தொகுதி துணை தலைவர் பகுருதீன் SDPI கட்சியின் செயல் வீரர் அபூ ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளையும் காவல் நிலையத்தில் செய்ய வேண்டிய நடைமுறைகளை செய்து கொடுத்து உடலை வாங்கி அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News