சூளகிரியில் இருசக்கர வாகனம் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து

சூளகிரியில் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனம் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 இளைஞர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

Update: 2024-06-06 13:14 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனம் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 3 இளைஞர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது . கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி நுழைவு பகுதியில் அமைந்துள்ள சர்வீஸ் சாலையில் அரசு பேருந்து சென்றுகொண்டிருந்த போது , அதே சாலையில் எதிரே இருந்து வந்த இருசக்கர வாகனம் ஒன்று பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சாலை விபத்தில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த ஒரே வாகனத்தில் சென்ற 3 இளைஞர்களுக்கு தலை , கை கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த இரத்த காயம் ஏற்பட்டது.. உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் விபத்தில் சிக்கிய இளைஞர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகே உள்ள 24 மணிநேர இலவச அவசர சிகிச்சை மையத்தில் அனுமதித்தனர்.. பின்னர் மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது...இந்த விபத்து சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News