சைக்கிளில் சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து !

சைக்கிளில் சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து ஒருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.

Update: 2024-03-27 09:04 GMT

காவல்துறை

சைக்கிளில் சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து ஒருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, தளவாபாளையம் ஆதி திராவிட தெருவை சேர்ந்தவர் தங்கவேல் வயது 50. இவர் மார்ச் 24ஆம் தேதி காலை 11:30 மணி அளவில், தளவாபாளையத்திலிருந்து புகலூர் செல்லும் சாலையில் அவருக்கு சொந்தமான சைக்கிள் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் தளவாபாளையம் கால்நடை மருத்துவமனை அருகே வந்தபோது, அதே சாலையில், கரூர், கடம்பங்குறிச்சியைச் சேர்ந்த சசிகுமார் வயது 38 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் எதிர்பாராத நேரத்தில் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சைக்கிள் உடன் கீழே விழுந்த தங்கவேலுக்கு வலது கால்,இடுப்பு, தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. சைக்கிளும் சேதம் அடைந்தது. உடனடியாக தங்கவேலை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தங்கவேலின் மகன் ராமநாதன் வயது 31 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சசிகுமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Tags:    

Similar News