ஆத்தூரில் கழிவுநீரை ஏரிக்கரையில் கொட்டிய வாகனம் பறிமுதல்

ஆத்தூர் அருகே மஞ்சினி ஏரிக்கரையில் அனுமதி இன்றி செப்டிக் டேங்க் கழிவு நீரை கொட்டிய வாகனத்தை நகராட்சி நிர்வாகம் பறிமுதல் செய்து 25 ஆயிரம் ரூபாய் அபராத விதிக்கப்பட்டது.

Update: 2024-06-30 12:49 GMT

பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மஞ்சனி ஏரிக்கரை பகுதியில் செப்டிக் டேங்க் கழிவு நீர் கொட்டி வருவதாக கிடைத்த தகவலின் பெயரில் நகராட்சி ஆணையாளர் உத்தரவு பேரில் அப்பகுதியில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கண்டனர் அப்போது வீரகனூர் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் செப்டிக் டேங்க் கழிவுநீரை ஏறிக்கரை பகுதியில் கொட்டியது தெரியவந்தது.

  இதனை அடுத்து அவரது வாகனத்தை பறிமுதல் செய்து 25000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Tags:    

Similar News