பணி முடிந்து ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத கிணறு

அரும்புலியூரில் பணி முடிந்து ஓராண்டாகியும் இதுவரை அடுத்தகட்ட பணிகள் துவங்கப்படாமல் குடிநீர் கிணறு வீணாகி வருகிறது.

Update: 2024-02-19 07:26 GMT

குடிநீர் கிணறு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சியில், கோடை காலத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, கூடுதல் குடிநீர் ஆதாரம் ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 12.30 லட்சம் ரூபாய் செலவில், சீத்தாவரத்தில் புதிதாக திறந்தவெளி குடிநீர் கிணறு கடந்தாண்டு அமைக்கப்பட்டது. இந்த கிணற்றில் இருந்து, சீத்தாவரம் மற்றும் அரும்புலியூர் பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பணி முடிந்து ஓராண்டாகியும் இதுவரை அடுத்தகட்ட பணிகள் துவங்கப்படாமல் குடிநீர் கிணறு வீணாகி வருகிறது. எனவே, கோடை காலம் வருவதால், இந்த கிணறு மூலம் குடிநீர் வினியோகம் மேற்கொள்ள வேண்டுமென, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News