வாகனத்தை வழிமறித்த காட்டு யானை!

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே எதிர்பாராத நேரத்தில் வாகனத்தை வழிமறித்த காட்டு யானையால் பரபரப்பு.

Update: 2024-03-09 04:58 GMT
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதியில் போதிய அளவு தண்ணீர் மற்றும் உணவு கிடைப்பதில்லை. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு ,தண்ணீர் தேடி ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகிறது. இந்நிலையில் மசனகுடி சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது காட்டு யானை ஒன்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சாலையைக் கடந்தது. அப்போது அவ்வழியாக சென்ற ஜீப்பை நேருக்கு நேர் சந்தித்ததுடன், சத்தம எழுப்பி விரட்ட முயன்றது. அப்போது ஜீப் ஓட்டுனர் லாவகமாக யோசித்து வாகனத்தை பின்னோக்கி இயக்கியதால் யானை சாலையை கடந்து சென்றது. இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சாலை ஓரங்களில் வனவிலங்கு இருந்தால் தங்களது வாகனங்களை நிறுத்தாமல் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்துள்ளனர்.
Tags:    

Similar News